ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 19, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்

*    தேர்வே எழுதாமல் போலி சான்றிதழ் தந்த மத்திய பிரதேசம் போபால் நகரில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மேனாள் துணை வேந்தர் அய்தராபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம்.

* மனிதாபிமான, மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதே நிலையில் - மாநிலத்தின் உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிகக் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

 இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ம.பி. மற்றும் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க அனுமதி மறுத்த உச்ச நீதிமன்றம், நேற்று ம.பி. அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.

*வங்கிப் பணியாளர்களை கழிசடைகள் என பேசிய துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தியை ரிசர்வ் வங்கி இயக்குனர் பதவியில் இருந்து நீக்கிட வங்கி ஊழியர் சங்கம் ஏஅய்பிஇஏ நிதி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மதுரை ரயில்வே கோட்டத்தில் ஹிந்தி மொழி பயன்பாடு குறித்து ஆய்வு நடத்த வருகை தரும் ஹிந்தி அலுவல் மொழி குழுவிற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எதிர்ப்பு. தமிழ் நாட்டின் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் ஹிந்தி பிரச்சாரம் செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ள பதவி தேவையற்றது என பேட்டி..

- குடந்தை கருணா


No comments:

Post a Comment