தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு ஆறு பேர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு ஆறு பேர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

சென்னை, மே 31- தமிழ் நாடுஉள்ளிட்ட 15 மாநி லங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 57 மாநிலங்களவை உறுப் பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதை யடுத்து, புதிய உறுப்பினர் கள் தேர்வுக்கான தேர்தல் அட்டவணையை தேர் தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி, வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக, கடந்த 24ஆம்  தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. நாளை (ஜூன் 1) தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறு கிறது. ஜூன் 3ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும் பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட் டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்க ளுக்கு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண் ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4, அதிமுக வுக்கு 2 இடம் கிடைத் துள்ளது. அதில் 3 இடங் களில் திமுகவும், ஒரு இடத்தில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் 2 பேர் போட்டியிடுகின்றனர்.

அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுக்களை நேற்றுடன் தாக்கல் செய்து முடித்து விட்டனர்.

இதுதவிர, சுயேச்சை களாக பத்மராஜன், அக்னி இராமச்சந்திரன், மன்மதன், த.நா.வேல் முருகன் சோழகனார், தேவராஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ள னர். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாகும்.

ஒரு வேட்பாளருக்கு 34 சட்டப்பேரவை உறுப் பினர்களின் ஆதரவு வேண்டும். அத்துடன், வேட்புமனு தாக்கலின் போது 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன் மொழிவுக் கடிதம் சமர்ப் பிக்க வேண்டும்.

நாளை (ஜூன் 1) நடைபெறும் வேட்பு மனு பரிசீலனையின்போது, முன்மொழிவுக் கடிதம் இல்லாத மனுக்கள் நிரா கரிக்கப்படும்.

அந்த வகையில், திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.கல்யாணசுந்தரம், ஆர்.கிரிராஜன், ராஜேஷ் குமார், அதிமுக சார்பில் போட்டியிடும் சி.வி.சண் முகம், ஆர்.தர்மர், காங்கி ரஸ் சார்பில் போட்டி  யிடும் ப.சிதம்பரம் ஆகி யோர் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது. வேறு தகுதியான வேட்பு மனுக்கள் வராதபட்சத் தில், தேர்தல் நடை பெறாது. எனவே, இறுதி அறிவிப்பு வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

No comments:

Post a Comment