வாகைக் குளத்தில் பொதுமக்களை ஈர்த்த கழக தெருமுனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

வாகைக் குளத்தில் பொதுமக்களை ஈர்த்த கழக தெருமுனைக் கூட்டம்

வாகைக்குளம், மே 10- தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் கிராமத் தில் கடைவீதியில் 7.5.2022 அன்று தெருமுனைக் கூட்டம் நடை பெற்றது.

தூத்துக்குடி மாவட்டத் திரா விடர் கழகம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய அமைப் பாளர் கோ.முருகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலா ளர் மு.முனியசாமி முன்னிலை வகித்தார். மண்டலத் தலைவர் சு.காசி தொடக்கவுரையாற்றினார். 

தந்தை பெரியாரின் அரும் பணி கள் என்ற தலைப்பில் மாவட்டத் தலைவர் மா.பால்சேந்திரம் சிறப்பு ரையாற்றினார். சரியாக மாலை 6 மணிக்கு தொடங்கிய உரை இரவு 8 மணியளவில் நிறைவு பெற்றது. ஏராளமான பொதுமக்கள் நின்று உரையினைக் கேட்டுச் சென்றனர். வெற்றிகரமாக நடந்த இக்கூட்டத் திற்கான ஏற்பாடுகளை வாகைக் குளம் கோ.முருகன் சிறப்பாகச் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் இரா.ஆழ்வார் கலந்து கொண்டு நன்றியுரையாற்றினார். மற்றும் தோழர்கள் ச.வெங்கட் ராமன், செ.செல்லத்துரை, பொ. போஸ், கி.கோபால்சாமி ஆகி யோர் வருகை தந்து கூட்டத்தைப் பெருமைப்படுத்தினர்.

No comments:

Post a Comment