பெரியார் பிஞ்சு மாத இதழ் சார்பில் கடந்த 22 முதல் 26 முடிய நடைபெற்ற பிஞ்சுகளின் பழகு முகாம் வெகுநேர்த்தியாக திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
8 வயதில் 3 ஆண்கள், 10 பெண்கள் என 13 பேர், 9 வயதில் 10 ஆண்கள், 6 பெண்கள் என 16 பேர், 10 வயதில் 5 ஆண்கள், 8 பெண்கள் என 13 பேர், 11 வயதில் 10 ஆண்கள், 6 பெண்கள் என 16 பேர், 12 வயதில் 6ஆண்கள், 2 பெண்கள் என 8 பேர், 13 வயதில் 5 ஆண்கள், 1 பெண் என 6 பேர் பழகுமுகாமில் பயிற்சி பெற்றனர்.
மாவட்டங்கள் வாரியாக பயிற்சி பெற்ற மழலைகள்
மதுரை 6, திருவண்ணாமலை 2, தருமபுரி 5, காஞ்சிபுரம் 3, தஞ்சாவூர் 8, திருச்சி 6, திருவாரூர் 2, புதுக்கோட்டை 5, காரைக்கால் 4, ஈரோடு 5, சென்னை 18, கிருட்டினகிரி 1, திருவள்ளூர் 3, திண்டுக்கல் 1, கோவை 2, திருப்பத்தூர் 1 ஆக மொத்தம் 16 மாவட்டங்களிலிருந்து பழகு முகாமில் 39 பேர் ஆண்கள், 33 பேர் பெண்கள் என பிஞ்சுகள் 72 பேர் பழகு முகாமில் இடம் பெற்றனர்.
குழந்தைகளை குழந்தைகளாகவே பாவித்து, அவர்களின் சுதந்திர சிந்தனை, தனித்திறன்களை வெளிப்படுத்த உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டதுடன், பகுத்தறிவு, வாழ்வியல் நெறிமுறைகளை கற்கும் வாய்ப்புகளையும் மழலைகள் பெற்றனர்.
பழகு முகாமில் காணொலி மூலம் கலந்துரையாடியபோது திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிஞ்சுகளிடம் கொண்ட உரிமை, பாசம் அனைவரையும் நெகிழச்செய்தது.
பகுத்தறிவுச் சிந்தனைக்கான பட்டறையாக, வாழ்வியல் நெறிமுறைகளை கற்பிக்கின்ற சிந்தனைக் கூடமாக, பிஞ்சுகளின் பாதையிலேயே சென்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என பழகு முகாம் பிஞ்சுகளின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது என்று பெருமகிழ்வுடன் கூறி விடைபெற்றார்கள்.
No comments:
Post a Comment