ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 15, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல்,சென்னை

*    பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு, அதன் முன்னோட்ட செயல்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இந்தியாவில் பெரும்பான்மைவாதம், பொருளா தார சீரழிவை ஏற்படுத்தும், ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பேச்சு.

தி டெலிகிராப்:

* பாஜக போலி இந்துத்துவாவை பரப்பி, உண்மை யான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புகிறது. மாநிலத்திலிருந்து "மும்பையை" பிரிக்கும் அவர்களது முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையாது என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பாஜகவை சாடினார்.

* காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிலை பதவிகளிலும், இதர பிற்படுத்தப்பட்டோர்,  தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் மற்றும்  சிறுபான்மையினர் ஆகிய பிரிவினருக்கு 50% பிரதிநிதித்துவம் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் 'ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு' அளிக்கவும் ஆதரவு தர உள்ளது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment