ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 20, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,சென்னை

* ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைகள் ஒன்றிய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆளுநர்கள் மாநில அரசின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது தவறு,  பேரறிவாளன் விடுதலை தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை தந்துள்ளதாக தலையங்க செய்தி.

* ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசியல் சாசன திட்டத்திற்கு எதிராக  அடுத்தடுத்து வந்த அரசுகள் செயல்பட்டதாக மேனாள் நீதிபதி சந்துரு கருத்து.

* உ.பி.யில் உள்ள பாஜக உண்மையில் மற்ற கட்சிகளை விட சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கிறதா? உண்மையில் இல்லை. உயர் ஜாதியினர் மாநில சட்டமன்றத்தில் மட்டுமல்ல, அரசாங்கத் திலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், அதே சமயம் மத சிறுபான்மையினர் சிறிய பிரதிநிதித்துவத்தைக் காண்கிறார்கள் என கட்டுரை யாளர்கள் பிரனி தாவன், கிறிஸ்டபி ஜாப்ரலெட் கருத்து.

 - குடந்தை கருணா


No comments:

Post a Comment