சி.ஏ., முடித்தவருக்கு அதிகாரி பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

சி.ஏ., முடித்தவருக்கு அதிகாரி பணியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : மேனேஜர் பிரிவில் (ரிஸ்க் 40, கிரடிட் 100, கருவூலம் 5) 145 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : சி.ஏ., (கணக்கு தணிக்கையாளர்) அல்லது ஏதாவது ஒரு டிகிரியுடன் எம்.பி.ஏ., (நிதி) முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.1.2022 அடிப்படையில் கருவூலம் பணிக்கு 25 - 37, மற்ற பணிக்கு 25 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம் : சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ. 50.

கடைசிநாள் : 7.5.2022

விவரங்களுக்கு : www.pnbindia.in/Recruitments.aspx

No comments:

Post a Comment