ராகுல் மேலும் பேசுகையில், ‘‘உதய்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனை அமர்வு கூட்டத்தில், நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் மாநில கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட விரும்புகிறோம். காங்கிரசை ‘பெரியண்ணனாக’ நான் பார்க்கவில்லை. அதாவது, திமுக.வை தமிழ்நாடு மாநில கட்சியாக மதிக்கிறோம். மற்ற எதிர்க்கட்சிகளை விட காங்கிரஸ் எந்த வகையிலும் உயர்ந்ததல்ல, நாம் அனைவரும் ஒரே போரில் போராடுகிறோம். அதே சமயம் மாநில கட்சிகளை ஒரே கட்டமைப்பாக செயல்படுத்தக் கூடிய தேசிய சித்தாந்தத்தை காங்கிரஸ் கொண்டுள்ளது,’’ என்றார்.
என் தந்தை மன்னிக்க கற்றுத் தந்திருக்கிறார்
மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆவது நினைவு நாள் நேற்று (21.5.2022) கடைப்பிடிக்கப்பட்டது. இது குறித்து ராகுல் காந்தி தனது சுட்டுரை பதிவில், ‘எனது தந்தை தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவரது கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைத்தன. அவர் கருணை மிக்க மனிதர். எனக்கும், பிரியங்காவுக்கும் மன்னிக்கவும், மற்றவர் உணர்வுகளைப் புரிந்து கொள்வதன் மதிப்பையும் கற்றுக்கொடுத்தவர். நாங்கள் ஒன்றாக செலவழித்த நேரங்களை அன்புடன் நினைவு கொள்கிறேன்,’ என கூறி உள்ளார்.
No comments:
Post a Comment