பொதுத்தேர்வு: தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

பொதுத்தேர்வு: தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை

சென்னை, மே 4 பொதுத்தேர்வின் போது தேர்வு மய்யங் களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) 5.5.2022 அன்று தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் (பிளஸ்-1) வருகிற 10-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத் தேர்வுகள் வருகிற 6-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. இந்நிலையில், பொதுத் தேர்வு தொடர்பாக அனைத்து மண்டல தலைமைப் பொறியா ளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின் போது தேர்வு மய்யங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது.

பொதுத்தேர்வு மய்யங்களுக்கு அருகில் இருக்கும் மின் மாற்றிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் பழுதடைந் திருந்தால் உடனடியாக மாற்றம் செய்யவும் அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment