கரோனா தொற்றால் உயிரிழப்பு கங்கையில் மிதந்த பிணங்கள் எத்தனை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 17, 2022

கரோனா தொற்றால் உயிரிழப்பு கங்கையில் மிதந்த பிணங்கள் எத்தனை?

தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

புதுடில்லி, மே 17- கங்கையாற்றில் இந்து மத நம்பிக்கையின் பெயரால் பிணங்களை எறிவதன்மூலம் மாசு கேடுகள் அதிகரித்த வண்ணம் உள் ளன. இதுகுறித்து சமூக செயற்பாட் டாளர்கள் பலரும் எச்சரித்து வந் துள்ளனர். மோடியரசு அமைந்த பின்னர் பல ஆயிரம்கோடி ஒதுக்கு வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ÔபுனிதÕ கங்கை தூய்மை அடைந்த பாடில்லை.

உயிரிழந்தோரின் உடலை இந்து மதத்தின் பெயரால் ‘புனித’ கங் கையில் வீசி எறிந்துவிட்டால் அவர் கள் ‘சொர்க்கத்தை’ அடைகிறார்கள் என்று வழக்கமாகவே கங்கைக்கரை யோரப் பகுதிகளில் பிணக்குவியல் கள் இருப்பதும், கங்கையாற்றில் தூக்கி எறியப்பட்டு மிதப்பதும் உண்டு. கங்கை ஆற்றில் மூழ்கினால் ‘பாவம்’ தொலைந்துவிடும் என்கிற மூடநம்பிக்கையால் அப்படி கங்கை யாற்றில் மூழ்கி எழுவோர் பிணம் மிதப்பதைக் காண்பது என்பதும் தொடர்ச்சியாக இருந்து வருவதுதான்.

அந்த பழக்கத்தின்படி, கரோனா தொற்றுபாதிப்பில் உயிரிழந்தவர் களையும் கங்கையாற்றில் தூக்கி வீசிய தகவல் அவ்வப்போது வெளி யானது.

இந்நிலையில், கரோனா தொற் றால் ஏற்பட்ட உயிரிழப்பில் கங்கை யில் மிதந்த பிணங்கள் எத்தனை? என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. கரோனா தொற்று பரவலுக்கு முன்பிருந்து கடந்த மார்ச் 31 வரை, கங்கை ஆற்றில் எத்தனை பிணங்கள் வீசி எறியப்பட்டன; எத்தனை பிணங்கள் கங்கை ஆற்றங்கரையில் புதைக்கப் பட்டன என்ற தகவலை அளிக் குமாறு, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப் பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஆற்றில் வீசி எறியப்பட்டன

கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள கங்கை ஆற்றில் நூற் றுக்கணக்கான பிணங்கள் மிதந்தன. கரோனாவால் உயிரிழந்தவர்களின் பிணங்கள் ஆற்றில் வீசி எறியப் பட்டன.

பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல்

இந்நிலையில், கரோனா தொற் றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முறையான வழி காட்டு நெறிமுறைகள் பின்பற்றப் பட்டது என்பதை உறுதி செய்யக் கோரி, பத்திரிகையாளர் சஞ்சய் சர்மா என்பவர் தேசிய பசுமை தீர்ப்பா யத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தீர்ப் பாயம் நேற்று (16.5.2022) பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டதாவது,

கரோனா தொற்று பரவல் ஏற் படுவதற்கு முந்தைய 2018 -2019ஆம் ஆண்டு மற்றும் தொற்று பரவல் ஏற்பட்ட 2020-2021 துவங்கி, 2022 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், கங்கை ஆற்றில் எத்தனை பிணங்கள் வீசி எறியப்பட்டு மிதந்து வந்தது கண்டறியப்பட்டன.

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் எத்தனை பிணங்கள் அடக்கம் செய் யப்பட்டுள்ளன. இவற்றில் எத்தனை இறுதிச் சடங்குகளுக்கு அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. கங்கை ஆற்றில் பிணங்களை வீசி எறிவதையும், ஆற்றங்கரையில் உடல்களை புதைப்பதையும் தடுக்க, மாநில அரசுகள் சார்பில் என்ன விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதில் விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு, விசாரணை நடை பெறுகின்றனவா. சுற்றுச்சூழல் நெறி முறைகள் ஏதேனும் மீறப்பட்டிருந் தால், மறுசீரமைப்பு செய்ய எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்கவும்.

மேற்குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தையும் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் அரசுகள் அளிக்க வேண்டும். -இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment