குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் உள்ளது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 29, 2022

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் உள்ளது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

சென்னை, மே 29  இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 

இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச் சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என இங்கி லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடு களின் மருத்துவர்கள் தெரிவித்துள் ளனர். 

இது குறித்து உலக சுகாதார அமைப்பின், 'உலக தொற்று அபாய தயார்நிலை' குழுவின் இயக்குநர் சில்வி பிரையன்ட் கூறியதாவது:- 

''மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல. ஆனால், மெதுவாக இது சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது. 

இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு விரைவான நடவடிக்கை தேவை. தடுப்பூசியும், முறையான சிகிச்சையும் இதற்கு ஒரே தீர்வு. பாதிக்கப்பட்டவர்களை கண்டு பிடித்து, தனிமைப்படுத்துவதே, இதன் பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகும். 

எதிர்காலத்தில் இந்த குரங்கு காய்ச்சல் இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்களை பாதிக்கும் என 

எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment