தொடரும் நெருக்கடி நிலை ராணுவத் தளபதி பதவி விலக இருப்பதாகத் தகவல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 28, 2022

தொடரும் நெருக்கடி நிலை ராணுவத் தளபதி பதவி விலக இருப்பதாகத் தகவல்!

கொழும்பு, மே 28 இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, கொழும்பில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. 

இதையடுத்து அந்த நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை விட்டு விலகினார். அதன்பிறகு புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். 

இருப்பினும் பொருளாதார நெருக்கடியினால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் இன்னும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இலங்கையின் ராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஜீன் 31-ஆம் தேதி தனது பதவியை விட்டு விலகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

இதைத் தொடர்ந்து, புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்படவிருக்கும் விகம் லியனகே ஜூலை 1-ஆம் தேதி பொறுப்பேற்றார் எனக் கூறப்படுகிறது.

சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 23-ஆவது தளபதியாக அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment