டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
இந்தியா திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் உரியது; வேறு எவரும் சொந்தம் கொண்டாட முடியாது என அசாதுதீன் ஒவைசி பேச்சு.
அயோத்திக்குப் பிறகு, காசி, மதுரா கோயில் எழும் என்ற உ.பி. முதல்வர் யோகிக்கு, நவீன காலத்தில் மத ரீதியாக பேசுவதை ஊக்குவிக்க கூடாது என ஆர்.எல்.டி. தலைவர் ஜெயந்த் சவுத்ரி பதிலடி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
மாநிலங்களவை தேர்தலுக்கு பிஜு ஜனதா தளம் சார்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இருவர், சிறுபான்மை மற்றும் பழங்குடி பிரிவில் இருந்து தலா ஒருவர் என நால்வரை பரிந்துரை செய்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
றீ ஜாதி வாரி கணக்கெடுப்பை மோடி அரசு நடத்த வேண்டும் என ராஷ்டிரிய லோக் தளம் நடத்திய மேனாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் நினைவு நாள் நிகழ்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ராஷ்டிரிய ஜனதா தளம், திர்ணாமுல் காங்கிரஸ், சிபிஎம், அப்னா தளம், சமாஜ்வாடி கட்சி, திரிபுராவின் திப்ரா மோதா கட்சி மற்றும் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு.
டெலிகிராப்:
றீ மோடி ஆட்சியின் எட்டு ஆண்டுகள் சாதனை, அறிவிக்கப்பட்ட அனைத்து நோக்கங்களையும் அடை யத் தவறிய பேரழிவுகரமான பணமதிப்பிழப்பு நட வடிக்கை என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நினைவுபடுத்தினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
றீ சமூக நீதி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் திராவிட மாதிரி மற்றும் அதன் தத்துவம் குறித்து கட்சி தொடர் பயிலரங்குகளை நடத்திட திமுக மாவட்டச் செய லாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment