வேலூர், மே 14 வேலூர் மாநகராட்சி சொத்துக்கள் பட்டியலிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சொத்து பட்டியல் விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படு கிறது.
வேலூர் மாநகராட்சி நிர்வாக வசதிக்காக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து சொத்து விவரங்களையும் பட்டியலிடும் பணி மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 4 மண்டலங்களிலும் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அந்த பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment