தமிழகத்தில் புதிதாக 37 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

தமிழகத்தில் புதிதாக 37 பேருக்கு கரோனா

சென்னை, மே 5 - தமிழகத்தில் நேற்று ஆண்கள் 24, பெண்கள் 13 என மொத்தம் 37 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 23 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ் நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,095 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 15,603 பேர் குண மடைந்துள்ளனர். நேற்று மட்டும் 58 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 467 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  உயிரிழப்பு இல்லை. தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 39 ஆகவும், சென்னையில் 24 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேற்று காலை   நிலவரப்படி இந்தி யாவில் புதிதாக 3,205 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது. 19,509 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,802 பேர் கடந்த  24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  

No comments:

Post a Comment