குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை காப்பாற்றிய "சிங்கப்பெண்" பொதுமக்கள் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 17, 2022

குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை காப்பாற்றிய "சிங்கப்பெண்" பொதுமக்கள் பாராட்டு

நாகை, மே 17- நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள குளத்தின் கரை யில், அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ப வரின் இரண்டு குழந்தை கள் விளையாடிக் கொண் டிருந்தனர். அப்போது இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து வழுக்கி குளத்தில் விழுந்துள்ள னர். அப்போது அந்த வழியாக சென்ற எழிலரசி என்ற பெண் குழந்தைகள் இருவரும் தண்ணீரில் முழுகுவதை பார்த்த அவர், உடனடியாக தண்ணீரில் இறங்கி இரண்டு குழந் தைகளையும் பிடித்துக் கொண்டார். 

ஆனால், சிமெண்ட் சுவரில் ஏற முடியாமல் குழந்தைகள் இருவரை யும் கையில் பிடித்தபடி நீண்ட நேரம் உயிருக்கு போராடியுள்ளார். தண் ணீர் ஆழமாக இருந்த தால் யாராலும் உதவி செய்ய முடியவில்லை. இந்நிலையில் தகவல் அறிந்த அந்த குழந்தை களின் தந்தை வேகமாக ஓடிவந்து தண்ணீரில் குதித்து இரண்டு குழந் தைகளையும் எழிலரசி யையும் காப்பாற்றினார். 

தனது உயிரை துச்ச மென நினைத்து குழந்தை களை காப்பாற்றிய எழி லரசியை அப்பகுதி பொது மக்களும் ஆசிரியர்களும் பாராட்டினர்.

No comments:

Post a Comment