பெங்களூரு, மே 9 முதலமைச்சர் பதவிக்கு ரூ.2,500 கோடி கேட்டதாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான சனகவுடா பாட்டீல் கூறியுள்ளது கருநாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கருநாடகாவில் முதலமைச்சர் பதவிக்கு ரூ.2,500 கோடி கேட்டதாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சனகவுடா பாட்டீல் எத்னால் கூறிய நிலையில், இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்திட கருநாடாக காங்கிரஸ் பிரிவு வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மறுத்துவிட்டார்.
கருநாடக அமைச்சரவையில் மறுசீரமைப்பு குறித்த தகவல் பரவிய நிலையில், சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் பாஜக ஒன்றிய இணை அமைச்சருமான சனகவுடா இந்த அறிக்கையை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது: அரசியல் களத்தில் பல திருடர்களை சந்திப்பீர்கள். சிலர் டில்லி சென்று, நட்டாவை சந்திக்கவைக்கிறோம் என்றும் கூறுவர். அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். டில்லியில் இருந்து சிலர் என்னிடம் வந்து, ‘உங்களை முதல மைச்சராக்குகிறோம். ரூ.2,500 கோடி ரூபாய் கொடுங்கள் என்றனர். எனக்கோ ரூ.2,500 கோடி என்றால் எவ்வளவு பணம் இந்தப் பணத்தை எங்கே வைத்திருப்பார்கள் என்றே சிந்திக்கிறேன். அறை யில் வைப்பதா அல்லது கிடங்கில் வைப்பதா என்று கேட்டேன். அவர்கள் என்னை ஜெபி நட்டாவிடமும், அமித் ஷாவின் வீட்டிற்கும் அழைத்து செல்வதாகக் கூறினார்கள் என்றார்.
No comments:
Post a Comment