தமிழர் தலைவரை வரவேற்க காத்திருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 20, 2022

தமிழர் தலைவரை வரவேற்க காத்திருக்கும் திருப்பத்தூர் மாவட்டம்

'நீட்'தேர்வு எதிர்ப்புப் பரப்புரையை நிகழ்த்தி பொதுமக்களை தெளிவு பெற வைக்கும் வகையில் 22.4.2022 அன்று திருப்பத்தூர் வருகை தரும் தன்னலமற்ற தமிழர் தலைவருக்கு, திருப்பத்தூர் - தருமபுரி சாலையில் உள்ள ஆனந்தன் சாந்தி திருமண மண்டபத்தின் அருகில் இருந்து, நூற்றுக்கணக்கான வாகனங்களில் கழகக் கொடிகளுடன் வழிநெடுக வாழ்த்துச் சொல்லி மாபெரும் வரவேற்பு அளித்து கூட்டமேடைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது.

பறையிசையுடன் துவங்கும் நிகழ்வில் புதிய தோழர்கள் பலர் கழகத்தில் இணையவிருக்கின்றனர்.

திருப்பத்தூர் புத்தகக் காட்சியில் பெருமளவு கழக வெளியீடுகளை வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு தமிழர் தலைவரால் பாராட்டும், வாழ்த்தும் கிடைக்கவிருக்கிறது.

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மகளிர் பாசறை அமைப்பாளர் மதிவதனியின் தொடக்க உரையுடன், பல்வேறு கட்சித் தலைவர்களும் பேருரை வழங்க தமிழர் தலைவர் சிறப்புரையாக தேசிய கல்விக் 

கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு, 'நீட்' தேர்வுக்கு எதிராக போர்முரசம் கொட்டுகிறார். நிகழ்ச்சி மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறுகிறது.


No comments:

Post a Comment