வெள்ளப் பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்க ரூ.434 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

வெள்ளப் பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்க ரூ.434 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

 


சென்னை,ஏப்.7- சட்டப் பேரவையில் நேற்று (06.04.2022) நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அவற்றுக்குப் பதில் அளித்து நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய தாவது:

சென்னை மாநகரம் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு களை நிரந்தரமாகத் தடுக்கும் வகையில், 12 வெள்ளப் பணிகள் முதல்கட்டமாக ரூ.250 கோடி மதிப்பிலும், 2-வது கட்டமாக ரூ.184.22 கோடி மதிப்பிலும் மேற்கொள் ளப்படும்.

சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்களில் 50 குறு பாசன கண்மாய்களைத் தரப்படுத்துதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் ரூ.33.43 கோடியில் நிறை வேற்றப்படும். கோதை யாறு, கொள்ளிடம், வெண்ணாறு மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு வடிநிலை பாசனக் கட்ட மைப்பு களை ஒருங்கி ணைந்த முறையில் மறுசீர மைப்பு செய்யவும், வெளிப் புற நிதியுதவி பெறவும் வசதியாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் ரூ.31.15 கோடியில் மேற்கொள்ளப்படும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும்செயற்கைக்கோள் உதவியுடன் சென்னை நகரம் மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளைக் கண்கா ணிக்கவும், நீரின் தன்மையை ஆராயவும் ரூ.5.50 கோடியில் செயலி உருவாக்கப்படும்.

கன்னியாகுமரி, தென் காசி,  திருநெல்வேலி மாவட்டங்களில் 4 புதிய நீர்த்தேக்கங்கள் அமைக்கும் வகையில், சுற்றுச் சூழல் தாக்க ஆய்வு மற்றும் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் ரூ.9.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப் படும்.

திருநெல்வேலி மாவட் டம் திசையன்விளை வட்டம் கஸ்தூரி ரெங்காபுரம் கிராமத் தில் ரூ.5 கோடியில் புதிதாக குளம் அமைக்கப்படும். ராதா புரம் வட்டத்தில் இரு இடங் களில் கடல்நீர் உட்புகுதலைத் தடுக்கும் வகையில், ரூ.35 கோடியில் கடைமடை கட்ட மைப்பு கள் உருவாக்கப்படும்.

காஞ்சிபுரம், சிவ கங்கை, தென்காசி மாவட் டங்களில் 5 இடங்களில் ரூ.84.30 கோடியில் புதிய அணைகள் கட்டப்படும். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் 3 இடங்களில் நிலத்தடி நீர் செறிவை அதிகரிக்கும் வகையில் ரூ.88 கோடியில்தரைகீழ் தடுப்ப ணைகள் கட்டப்படும்.

கோவை, திருப்பூர், திண்டுக் கல், மதுரை, திருப்பத்தூர் உள்பட8 மாவட்டங்களில் ரூ.215 கோடியில் பாசனக் கட்டு மானங்கள் புனரமைக்கப் படும். தூத்துக்குடி மாவட் டம் மருதூர் மேலக்கால், கடம்பா குளம் உபரிநீர் போக்கியில் ரூ.37.20 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் படும்.

கோவை, திண்டுக்கல், பெரம்பலூர், சேலம், திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், 10 இடங்களில் ரூ.70.95 கோடி யில் புதிய தடுப் பணைகள் கட்டப்படும்.

கன்னியாகுமரி மாவட் டம் திருவட்டாறு, விள வங்கோடு வட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க ரூ.70 கோடி செலவில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப் படும்.

ஆறு, ஏரிகளில் மணல் எடுக்க

விவசாயிகளுக்கு அனுமதி

சென்னை சட்டப் பேரவையில் நேற்று நீர்வளத் துறை மானி யக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, உறுப்பினர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் துரை முருகன் பேசியதாவது:

அய்ந்து ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று கூறியுள்ளோம்.

140 தடுப்பணைகள் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு வாக்கு கொடுத்திருந்தேன். கரோனா காரணமாக அதை நிறைவேற்ற முடியவில்லை. உரிய காலத்தில் தடுப்பணைகள் கட்டப்படும்.

புதிய அணைகள் கட்ட வேண்டும் என சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். புதிய அணைகள் கட்டுவ தற்கு இடமே இல்லை. கலைஞர் ஆட்சியில் 48 அணைகள் கட்டப்பட் டன.

எனவே, தடுப்பணை கள் மூலம் வறண்ட நிலத் தை, வளம்கொழிக்கும் பூமியாக மாற்றும் திட் டத்தை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத் தும். ஏரிகளில் கருவேல மரங்களை அகற்ற நட வடிக்கை எடுக்கப்படும். அவற்றை வெட்டுவோ ருக்கு பரிசு வழங்கலாம். நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் படிப்படி யாக பணி நிரந் தரம் செய்யப்படுவார்கள்.

சில மாவட்டங்களில் விவசாயிகள் மணல் எடுப்பதில் பிரச்சினை உள்ளதாகத் தெரிகிறது. ஆறு, ஏரிகளில் மணல் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல, செங்கல் சூளைகளுக்கு தேவை யான மணல் எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

No comments:

Post a Comment