சென்னை, ஏப்.28 - குழந்தைகளின் பொழுதுபோக்கான அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்க இணையவழியிலான கோடைகால முகாம், சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் நிலையம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.
வரும் மே 2ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காலை 10.30 மணி முதல் 12.45 மணி வரை 5 பிரிவுகளில் முகாம்கள் நடைபெற உள்ளன.
இதில் கலந்து கொள்வதற்கு இம்மாதம் 25ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இம்மாதம் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. ஆர்வம் உள்ள 8 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ரூ.250 பதிவு கட்டணமாக செலுத்தி இதில் பங்கேற்கலாம். பதிவு கட்டணத்தை காசோலை யாகவோ, வரை வோலையாகவோ தலைமை அஞ்சல் அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சல் நிலையம், சென்னை- 600002 என்ற பெயரில் எடுத்து விண்ணப்பத் துடன் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை தலைமை அஞ்சல் அதிகாரி, அண்ணாசாலை தலைமை அஞ்சல் நிலையம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களை 044-28543199 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என, சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி முரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment