10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை 27 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 6, 2022

10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை 27 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்

சென்னை,ஏப்.6- தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. 

அதன்படி 10ஆம் வகுப்புக்கு அடுத்த மாதம் (மே) 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்புக்கு மே 9ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்புக்கு மே 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது. 

இந்த நிலையில் அந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் எத்தனை மாணவர்கள் எழுத இருக்கிறார்கள்? என்ற புள்ளி விவரத்தை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

அதில், பள்ளி மாணவர்களாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 4 லட்சத்து 86 ஆயிரத்து 887 மாணவர்கள், 4 லட்சத்து 68 ஆயிரத்து 586 மாணவிகள், 1 திருநங்கை என மொத்தம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேர் எழுதுகின்றனர். 

11ஆம் வகுப்பு தேர்வை 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும், 2 திருநங்கைகள் என 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எதிர்கொள்கின்றனர். 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுத இருக்கின்றனர்.

இதுதவிர தனித்தேர்வர்களாக 10ஆம் வகுப்பு தேர்வை 30 ஆயிரத்து 890 பேரும், 11ஆம் வகுப்பு தேர்வை 5 ஆயிரத்து 717 பேரும், 12ஆம் வகுப்பு தேர்வை 28 ஆயிரத்து 380 பேரும் எழுதுகின்றனர்.

ஆக மொத்தம் பள்ளித்தேர்வுகள் மற்றும் தனித் தேர்வர்கள் என 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 27 லட்சத்து 41 ஆயிரத்து 662 பேர் எழுத இருக்கின்றனர்.

மேற்கண்ட தகவலை கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment