சென்னை, மார்ச் 4- ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் விவசாய பம்புகள் வாங்க 50 சதவீத மானியத்தில் நிதி பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நிலம் மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் அல்லது மின் இணைப்பு பெற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலமாக மானியம் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் தற்சமயம் டீசல் இயந்திரம் - பம்பு பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ள டீசல் இயந்திரம் - பம்பு வாங்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் http://application.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
விண்ணப்பிப்பவரின் ஒளிப்படம், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சிட்டா, பட்டா, அடங்கல், அ-பதிவேடு, புல வரைபடம் ஆகியவற்றுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளியை விண்ணப்பதாரர்கள் இணைத்து அனுப்ப வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்ய இயலாத நபர்கள் நேரடியாக தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதேபோல் நீர்ப்பாசனத்துக்கான பிவிசி குழாய்களை 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.15ஆயிரம் நிதியைப்பெறவிண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment