வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 21, 2022

வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை

சியோல், மார்ச் 21- வடகொரியா, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை திரும் பப்பெற அமெரிக்காவுக்கு அழுத் தம் கொடுக்கும் வகையிலும், அண்டை நாடுகளை அச்சுறுத்தும் விதமாகவும் தொடர்ச்சியாக ஏவு கணை சோதனைகளை நடத்தி வரு கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை 10 முறை ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இதில் கடைசியாக நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை செய்ததாக தென்கொரியா ராணு வம் தெரிவித்துள்ளது. அந்த நாட் டின் மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து அடுத்தடுத்து வீசப்பட்ட 4 பீரங்கி குண்டுகள் கடலில் விழுந் ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர பாலிஸ்டிக் ஏவுகணையை முழுமை யாக சோதிக்க தயாராகி வருவதாக அமெரிக்க குற்றம் சாட்டி வரும் நிலையில், வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment