பெரியாரின் வேண்டுகோளும் எச்சரிக்கையும்! ஆத்திரம் வேண்டாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 12, 2022

பெரியாரின் வேண்டுகோளும் எச்சரிக்கையும்! ஆத்திரம் வேண்டாம்!

 27.03.1948 - குடிஅரசிலிருந்து...

அரசியலார் ஒருக்கால் வம்புக்கு வருவதனால் உங்களில் எத்தனை பேர் அதற்குத் தயாராயிருக்கிறீர்கள்? அதற்காகப் பலாத்காரத்தில் இறங்கக்கூடாது. எல்லா மக்களும் ஆணும், பெண்ணுமாகக் கட்டாயம் கருப்புச்சட்டை அணியவேண்டும்! இல்லங்கள் தோறும் கழகக் கொடி ஏற்றவேண்டும்! உங்களை எவரும் ஒன்றும் செய்ய முடியாது! அப்படியும் தொல்லை கொடுத்தால் அதற்காவன செய்வதில் இயக்கமும் தலைவர்களும் கட்டாயம் பொறுப்பேற்றே தீருவார்கள். நீங்கள்! அப்போதுங்கூட ஆத்திரப்படக் கூடாது.

என்னழிவு இயக்க அழிவல்ல! பிராமணிய அழிவே!

நான் இருக்கும் வரை நமது இயக்க வண்டி நிதானமாக ஓடி எதிரிகளுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது. என்னையும் காந்தியார் போன்று சுட்டுவிட்டால் நமது இயக்க வண்டி வேகமாகச் சென்று சூத்திரப் பட்டமும் பிராமணியமும் விரைவில் ஒழியுமே தவிர என்னோடு திராவிட இயக்க கொள்கை அழிந்துவிடும் என்று எவராகிலும் கருதினால் அதைவிடப் பயித்தியக்காரத்தனம் வேறிருக்க முடியாது.

பெரியார் ஈ.வெ.ரா.


No comments:

Post a Comment