வடகொரியா மீது பொருளாதாரத் தடை அமெரிக்கா வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 28, 2022

வடகொரியா மீது பொருளாதாரத் தடை அமெரிக்கா வலியுறுத்தல்

நியூயார்க், மார்ச் 28- 'உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, ஏவுகணை சோத னைகளை நடத்தி வரும் வட கொரியா மீது, கடும் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும்' என, அய்.நா.,விடம் அமெரிக்கா வலி யுறுத்தியுள்ளது.

வடகொரிய அரசு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.சமீபத்தில், வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனையை நடத்தியது. இதை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கி லேயே, வடகொரியா நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அய்.நா.,வுக்கான அமெரிக்க தூதர் தாமஸ் கிரீன் பீல்டு கூறியதாவது:வடகொரியா, பல நாடுகளின் எதிர்ப்பை மீறி, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதையடுத்து, வட கொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என, அய்.நா., சபையிடம் அமெ ரிக்கா வலியுறுத்தி உள்ளது.

அய்.நா., பாதுகாப்பு கவுன்சில் விரைவில் கூடி, வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.இவ்வாறு அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment