நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : அலுவலக உதவியாளர் 11, காவலர் 2 என 13 இடம் உள்ளது.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். காவலர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 1.1.2022 அடிப்படையில் 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட கலெக்டர், வருவாய் துறை (அ- பிரிவு) முதல் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாமக்கல் - 637 003.
கடைசி நாள்: 4.4.2022. மாலை 5:45 மணி வரை.
விபரங்களுக்கு: https://namakkal.nic.in/notice_category/recruitment/
No comments:
Post a Comment