வருவாய் துறையில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 23, 2022

வருவாய் துறையில் காலிப் பணியிடங்கள்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : அலுவலக உதவியாளர் 11, காவலர் 2 என 13 இடம் உள்ளது.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். காவலர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 1.1.2022 அடிப்படையில் 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மாவட்ட கலெக்டர், வருவாய் துறை (அ- பிரிவு) முதல் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாமக்கல் - 637 003.

கடைசி நாள்: 4.4.2022. மாலை 5:45 மணி வரை.

விபரங்களுக்கு: https://namakkal.nic.in/notice_category/recruitment/ 

No comments:

Post a Comment