பாராட்டத்தக்க ஆணை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

பாராட்டத்தக்க ஆணை!

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின், மாணவர் சேர்க்கையில் 
அகில இந்திய ஒதுக்கீட்டில் 69 விழுக்காடு அரசாணை வெளியீடு

சென்னை, மார்ச் 3- தமிழ்நாட்டில், தேசிய அளவிலான மிகச் சிறந்த சட்டக்கல்வி வழங்கும் பொருட்டு, 2012ஆம் ஆண்டில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல் கலைக்கழகம், மாநிலச் சட்டம் மூலம் திருச்சிராப் பள்ளியில் தோற்றுவிக்கப்பட்டு 2013-_ 2014ஆம் கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் தற் சமயம் 521 மாணவர்கள் சட்டக் கல்வி பயின்று வருகின் றனர்.

தமிழ்நாடு தேசிய சட்டப் பல் கலைக்கழகத்தின் மாணவர் சேர்க் கையானது பொது சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வு (Common Law Admission Test - CLAT)  மூலம் நடை பெறுகிறது. இந்த பல்கலைக் கழகத்திற்கென ஒப்ப ளிக்கப்பட்ட மொத்த இடங்களுள் 45 விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டினை வசிப்பிடமாக கொண்ட மாணவர்களாலும் (Resident students of Tamil Nadu), 50 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின்(All India Quota) அடிப்படையிலும் மற்றும் 5 விழுக்காடு இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI Quota)  ஒதுக்கீட்டின் கீழும் பூர்த்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டினை வசிப்பிட மாக கொண்ட மாணவர்களுக் கான (45விழுக்காடு) இடங்களைப் பொறுத்த மட்டில், அவை தமிழ் நாடு அரசின் 69விழுக்காடு இட ஒதுக்கீட்டு கொள்கையினைப் பின்பற்றி பூர்த்தி செய்யப்படு கிறது. 50விழுக்காடு அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான இடங்களைப் பொறுத்தமட்டில் 15விழுக்காடு இடங்கள் தாழ்த் தப்பட்ட சமூகத்தினருக்கும் (SC)7.5 விழுக்காடு இடங்கள் பட் டியல் பழங்குடியி னருக்கும்(ST) மீதமுள்ள 77.5 விழுக்காடு இடங்கள் பொதுமுறைப் போட் டியிலும்  (Open Competition)  பூர்த்தி செய்யப்படுகிறது. இருப்பினும், அகில இந்திய இடஒதுக் கீட்டுக்கான இடங்களுள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கென தனியே இட ஒதுக்கீடு ஏதும் இதுவரை வழங் கப்படவில்லை. 

எனவே மேற்சொன்ன சூழலை கவனமுடன் கருத்தில் கொண்டு, விரிவான பரிசீல னைக்குப் பின் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான 50 விழுக்காடு இடங்களையும், தமிழ் நாட்டினை வசிப்பிடமாகக் கொண்ட மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட்டு வரும் மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள் கையான 69% (பொது பிரிவு - 31%, பழங்குடியினர் - 1% பட்டியலினத்தவர் - 18% மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் - 50%)-அய் போன்றே பின்பற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

அரசின் இந்த முடிவின் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி சமூக நீதியை நிலைநாட்டு வதோடு மட்டுமல்லாமல், தமிழ் நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழ கத்தின் அகில இந்திய ஒதுக் கீட்டுக் கான இடங்களுள் அவர்களுக்கு அதிகபட்சமாக 50% இடங்களை உறுதி செய்து இந்திய நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு  திகழ்கிறது. 

No comments:

Post a Comment