குரூப்-4 தேர்வுக்கான அறிக்கை விரைவில் வெளியாகும் சமூக வலைதளத் தகவலை நம்ப வேண்டாம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 26, 2022

குரூப்-4 தேர்வுக்கான அறிக்கை விரைவில் வெளியாகும் சமூக வலைதளத் தகவலை நம்ப வேண்டாம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை, மார்ச் 26- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச் மாதம்வெளியிடப்பட்டு, ஜூன் மாதம்போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் 5,255 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்நிலையில், குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் கடந்த 23ஆம் தேதி இரவு தகவல் பரவியது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 குறித்ததவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தஅறிவிக்கையை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம்.  டிஎன்பிஎஸ்சி அறிவிக்கைகள் அனைத்தும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதை தேர்வாணையத்தின் இணையதளத்தில்  பார்த்து அறிந்து கொள்ளுமாறு தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment