தென்கொரியாவில் புதிதாக 3.95 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 26, 2022

தென்கொரியாவில் புதிதாக 3.95 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

சியோல், மார்ச் 26- உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன. கடந்த சில மாதங்கள் கட்டுக்குள் இருந்த பாதிப்புகள், கரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து, ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலைக்கு காரணமாகி உள்ளது. 

இந்த சூழலில் தென்கொரியா வில் கரோனா பாதிப்புகள் தற் போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி கரோனா பாதிப்பு 5 லட் சத்தை கடந்த நிலையில், அதன் பின்னர் பாதிப்பு சற்று குறைந்தது.

இந்த நிலையில் தென்கொரியா வில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 95 ஆயிரத்து 589 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த நாட் டின் மொத்த கரோனா பாதிப்பு 1.08 கோடியை தாண்டியது. அதன்படி அங்கு இதுவரையில் 1 கோடியே 08 லட்சத்து 22 ஆயிரத்து 836 பேருக்கு தொற்று உறுதி செய் யப்பட்டிருக்கிறது.

அதே போல் 24 மணி நேரத்தில் 470 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 13 ஆயிரத்து 902 ஆக அதிகரித்தது என்பது குறிப் பிடத்தக்கது.


No comments:

Post a Comment