சென்னை,மார்ச்22- ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கையை எதிர்த்து, 28, 29-ஆம் தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஒன்றிய அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் எம். துரைபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். 18 மாத பஞ்சப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். அஞ்சல் பாதுகாப்பு, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் தனியாரை அனுமதிக்கக் கூடாது. எல்அய்சி , வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யக் கூடாது.
ஒன்றிய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 8.7 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29-ஆம் தேதி களில் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
இதில், தமிழ்நாட்டில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஒன்றிய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் 1.5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment