கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை!
இந்திய ஒன்றிய அளவில் மார்ச் 28, 29 ஆகிய நாள்களில் நடைபெறும் தொழிற்சங்க வேலை நிறுத்தத்திற்குத் திராவிடர் கழகம் ஆதரவு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
இலாபம் ஈட்டும் எல்.அய்.சி. போன்ற அரசுத் துறைகளையும் தனியாருக்குத் தாரை வார்ப்பினை எதிர்ப்பது உள்பட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய நாள்களில் நடைபெறும் அகில இந்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்திற்குத் திராவிடர் கழகம் தன் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது.
திராவிடர் கழக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த வர்கள் இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளு மாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை
27.3.2022
No comments:
Post a Comment