வேடிக்கை பார்க்கிறதா ஒன்றிய அரசு? கச்சத்தீவு அருகே கப்பல்களுடன் இலங்கை கடற்படை அணிவகுப்பு- மீனவர்களுக்கு அச்சுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 16, 2022

வேடிக்கை பார்க்கிறதா ஒன்றிய அரசு? கச்சத்தீவு அருகே கப்பல்களுடன் இலங்கை கடற்படை அணிவகுப்பு- மீனவர்களுக்கு அச்சுறுத்தல்

இராமேசுவரம்,பிப்.16- கடந்த சில நாட்களுக்கு முன்பு இராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களை மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தவும் மீனவர் சங்கங்கள் முடிவு செய்தன. இந்த நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் சென்றபோது அங்கு இலங்கை கடற்படையினர் 10-க்கும் மேற்பட்ட குட்டி ரோந்து கப்பல்களில் அணிவகுத்து நின்றனர். இதனை பார்த்து தமிழ்நாடு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் அங்கு செல்லாமல் வேறு பகுதிகளில் கிடைத்த மீன்களை பிடித்துக்கொண்டு கரை திரும்பினர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்றபோது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் அணிவகுத்து நின்றனர். இது எங்கள் எல்லை பகுதி. இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது. இதனை மீறினால் சிறை பிடிக்கப்படுவீர்கள் என எச்சரித்தனர். இதனால் பயந்து போன நாங்கள் அங்கிருந்து திரும்பி விட்டோம். பாரம்பரிய இடங்களில் மீன் பிடிக்க முடியாமல் நாங்கள் கரை திரும்பி உள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு கூறும் கடல் எல்லை சரிதானா என்பது எங்களுக்கு தெரியவில்லை. இந்த வி‌சயத்தில் தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் நமது கப்பல்களை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment