இந்நிலையில், இன்று (24.2.2022) காலை ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பகுதிகளில் குண்டு மழை பொழியத் தொடங்கின. அச்சமடைந்த மக்கள் மெட்ரோ ரயில் நிலைய சுரகங்கப் பாதைகள் உள்ளிட்ட மறைவிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் மீதான இத்தகைய தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அய்ந்து ரஷ்ய இராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் இந்தப் போக்கிற்கு இந்தியத் தரப்பில் கவலையும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment