சென்னை, பிப்.19 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர் பணி நியமனம் வழங்க தொடக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான கலந்தாய்வு இணையம் மூலம் நடக்கும் என்றும் தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் வரும், வட்டார கல்வி அலுவலர்களுக்கான பணியிடங்களில் 97 பேரை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களை தெரிவு செய்துதர வேண்டும் என தொடக்க கல்வித்துறை கடந்த 2019ஆம் ஆண்டில், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேட்டிருந்தது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2021ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் போட்டித் தேர்வு நடத்தி 96 பேரை தெரிவு செய்துள்ளது.
இதுதவிர, அவர்களின் கல்விச் சான்றுகளையும் தொடக்க கல்வித்துறைக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பியுள்ள 96 பேருக்கு வட்டார கல்வி அலுவலர் பணி நியமனம் வழங்க 23ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வு தொடக்க கல்வித்துறையின் மூலம் இணைய வழியில் நடக்க உள்ளது. மேற்கண்ட 96 பேரும், அந்தந்த மாவட்டங்களில் 23ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடக்க கல்வி இயக்ககத்தில் நடக்கும் பணி நியமன கவுன்சலிங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment