குடியரசு நாள் விழா அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 21, 2022

குடியரசு நாள் விழா அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா!

தமிழர் தலைவர் அறிவித்தபடி தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா! தமிழர் தலைவர் அறிவித்தபடி தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் விவரம் வருமாறு:

தஞ்சை மாவட்டத்தில்...

ஒன்றிய அரசை கண்டித்து  தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்ட கழகம் கண்டன ஆர்ப் பாட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துகிறது.

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களின் பட்டியல்.

நாள்: 26.01.2022, புதன், காலை 10 மணி

1, தஞ்சாவூர் மாநகரம்

இடம்: பெரியார் இல்லம் அருகில், கீழராஜவீதி

தலைமை: சி.அமர்சிங்

தஞ்சை மாவட்ட கழக தலைவர்

2, தஞ்சாவூர் ஒன்றியம்

இடம்:  பிள்ளையார்பட்டி

தலைமை: ச.சந்துரு

மாவட்ட கழக துணைச் செயலாளர்

3. உரத்தநாடு

இடம்:  பெரியார் படிப்பகம் அருகில்

தலைமை: அ. அருணகிரி

தஞ்சை மாவட்ட கழக செயலாளர்

4. வடசேரி (உரத்தநாடு ஒன்றியம்)

இடம்:  பெரியார்சிலை அருகில்

தலைமை: தி.வா.ஞானசிகாமணி

மாவட்ட தி.க இணைச் செயலாளர்

5. ஊரணிபுரம் (திருவோணம் ஒன்றியம்)

இடம்:  அண்ணாசிலை அருகில்

தலைமை: சாமி.அரசிளங்கோ

திருவோணம் ஒன்றிய கழக தலைவர்

6. சாலியமங்கலம்(அம்மாப்பேட்டை ஒன்றியம்)

இடம்:  தம்பித்துரை உரக்கடை அருகில்

தலைமை: கி. ஜவகர்

அம்மாப்பேட்டை ஒன்றிய கழக தலைவர்

7. திருவையாறு

இடம்:  பெரியார்சிலை அருகில்

தலைமை: ச.கண்ணன்

திருவையாறு ஒன்றிய கழக தலைவர்

8. திருக்காட்டுபள்ளி (பூதலூர் ஒன்றியம்)

இடம்:  பெரியார் சிலை அருகில்

தலைமை: அல்லூர் இரா.பாலு

பூதலூர் ஒன்றிய கழக தலைவர்

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்

மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்

காப்பாளர் வெ.ஜெயராமன்

மண்டலத் தலைவர் மு.அய்யனார்

உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அவரவர் பகுதிகளில் பங்கேற்று கண்டன குரல் எழுப்புவார்கள்

வெளியில் வர வாய்ப்பில்லாத கழகத் தோழர்கள் அவரவர் இல்லத்தின் முன்பு கண்டன குரல் எழுப்புவார்கள்

குறிப்பு:தங்கள் பகுதியில் உள்ள ஒத்தக் கருத்துள்ள தோழமை இயக்க பொறுப்பாளர் களை தொடர்பு கொண்டு அந்தந்த பகுதி களில் பங்கேற்கும் வகையில் ஒருங்கிணைக் குமாறு ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இவண்:

சி.அமர்சிங், மாவட்ட தலைவர்

அ. அருணகிரி, மாவட்ட செயலாளர்

தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில்... 

நாள்: 26.01.2022 புதன் கிழமை காலை சரியாக 10.30. மணி,

இடம்: குமரிமாவட்ட திராவிடர்கழக அலுவலகம் முன்பாக, பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.

திராவிடர்கழகம், திராவிடர்கழக இளைஞ ரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறி வாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அனை வரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம் 

இவண்,

மா.மு. சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் 

கோ.வெற்றிவேந்தன், மாவட்ட செயலாளர்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் .

காரைக்குடி கழக மாவட்டத்தில்...

நாள் : 26.01.2022, புதன் , காலை 10 மணி

1. காரைக்குடி பெரு நகரம்

இடம்: அய்ந்து விளக்கு காரைக்குடி, தலைமை: ம. கு. வைகறை காரைக்குடி மாவட்ட கழக செயலாளர்

2, தேவகோட்டை நகரம் 

இடம்:  தியாகிகள் பூங்கா, தேவகோட்டை.

தலைமை : கொ.மணிவண்ணன், மாவட்ட கழக துணைத் தலைவர்.

3. கல்லல் ஒன்றியம்

இடம்:  மூன்று சாலை, பலவான்குடி

தலைமை: ஆ.சுப்பையா, கல்லல் ஒன்றியத் தலைவர்.

4. தேவகோட்டை ஒன்றியம்

இடம்:  அதங்குடி விலக்கு, தலைமை அ.ஜோசப் தேவகோட்டை ஒன்றிய தலைவர்.

5. காளையார்கோயில் நகரம்

இடம்:  பேருந்து நிலையம், தலைமை: ராஜ்குமார், காளையார்கோயில் ஒன்றிய அமைப்பாளர்.

குறிப்பு: தங்கள் பகுதியில் உள்ள ஒத்தக் கருத்துள்ள தோழமை இயக்க பொறுப்பாளர் களை தொடர்பு கொண்டு அந்தந்த பகுதி களில் பங்கேற்கும் வகையில் ஒருங்கிணைக்கு மாறு ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் கேட் டுக்கொள்ளப்படுகிறார்கள்.

- இவண்: ச. அரங்கசாமி, 

மாவட்ட தலைவர், காரைக்குடி

ஈரோட்டில்...

நாள்: 26.01.2022 நேரம்: காலை 10:00 மணி.

இடம்: பெரியார் மன்றம்.ஈரோடு.

தலைமை: ஈரோடு.த.சண்முகம், மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்.

நடைபெறும் கண்டன‌ ஆர்ப்பாட்டத்தில் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்..

ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், ஈரோடு மாவட்டம்.

குறிப்பு: கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் தோழர்கள்... தவறாது முகக்கவசம் அணிந்து தனிமனித இடை வெளியுடன் அரசின் கரோனா கட்டுப்பாடு களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.


No comments:

Post a Comment