தடை
பொய்த் தகவல்கள் மற்றும் தவறான செய்திகளைப் பரப்பியதாக பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்திய ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.
அளவீடு
மாநிலம் முழுவதும் எடுக்கப்படும் கனிமங்களின் அளவையும், சுரங்கங்களின் நடவடிக்கைகளையும் ட்ரோன் மூலம் அளவீடு செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடவடிக்கை
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள படுக்கைகளையும் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட...
விடுபட்ட மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போட்டு முடிக்குமாறு, பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பொறியாளருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீவிரமாக
கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைப்பிடித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கட்டாயமல்ல...
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணிகளை தனி மய்யங்களில் தங்க வைப்பது கட்டாயமில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
தகவல்களை...
ஒன்றிய அரசு செயல்படும் விதம் குறித்த முக்கிய தகவல்களை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் தாமாகவே வெளியிடக் கோரிய மனுமீது பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
விலக வாய்ப்பு
வடகிழக்குப் பருவ மழை தமிழ் நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து 22.1.2022 முதல் விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment