சென்னை, ஜன.22 கரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் நாளை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு
20ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு ஏற்படும் தொற்றின் எண் ணிக்கை 28 ஆயிரத்து 561 ஆக இருந்தது. தமிழ்நாட்டில் தொற்று பரவல் சங்கிலியை உடைப்பதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், அத்தியாவசியப் பணிகள் தவிர முழு ஊரடங்கை அரசு தீவிர மாக அமல்படுத்தி வருகிறது.
முதலாவதாக கடந்த 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அப்போது அத்தியா வசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மய்யங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்கு வதற்கு அனுமதிக்கப்பட்டன. பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை இயங்கவில்லை.
9ஆம் தேதியன்று முழு ஊரடங்கின்போது, உணவகங் களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்பட்டன. உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் அதே நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. மற்ற மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி தரப்படவில்லை.
9ஆம் தேதி மற்றும் மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், ரயில் மற்றும் பஸ் நிலையங் களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன் படுத்திக் கொள்ள அனுமதிக்கப் பட்டது. அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டை வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தேர்வுகள் தள்ளிவைப்பு
தமிழ்நாட்டில் தற்போது 31ஆம் தேதிவரை இரவு 10 மணியில் இருந்து மறுநாள் காலை 5 மணிவரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள் ளது. வெள்ளிக்கிழமை, சனிக் கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, மாண வர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நடக்க விருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக கடந்த16ஆம் தேதி அரசு அறிவித்தது.
16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழ மையில் முழு ஊரடங்கின்போது மருந்துகள் மற்றும் பால் விநி யோகம் செய்வதற்கான மின் வணிக நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. மற்றபடி, அனைத்து வகை கடை களையும் மூட உத்தரவிடப்பட்டு இருந்தது.
நாளை முழு ஊரடங்கு
இந்த நிலையில் நாளை 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை யன்று) முழு ஊரடங்கை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப் பதாவது:-
தமிழ்நாட்டில் கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த 23ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படு கிறது. கரோனா நோய்த் தொற் றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை யின் 12ஆம் தேதியிட்ட அரசா ணையின்படி, கடந்த 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டது.
முந்தைய ஊரடங்கு போலவே
தற்போது தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன்கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப் படுத்தும் வகையில் வரும் 23ஆம் தேதியன்று (ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படும்.
இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16ஆம் தேதியன்று முழு ஊரடங்கின் போது நடை முறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்; தடை செய் யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும்.
மேலும், வெளியூர்களிலி ருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் ஆகியவை பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக அனுமதிக்கப் படும்.
முழு ஒத்துழைப்பு
மாவட்ட ரயில் நிலையங் களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கை களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment