சென்னை, ஜன.21 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 561 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய (20.1.2022) கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 54 ஆயிரத்து 912 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 28 ஆயிரத்து 561 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 7,520 பேரும், கோவையில் 3,390 பேரும், செங்கல்பட்டில் 2,196 பேரும், கன்னியாகுமரியில் 1,148 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்றைய (20.1.2022) நிலவரப்படி 1 லட்சத்து 79 ஆயிரத்து 205 பேர் மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவுக்கு தமிழ்நாட்டில் நேற்று 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 112 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பில் இருந்து 19 ஆயிரத்து 978 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரையில் 28 லட்சத்து 26 ஆயிரத்து 479 பேர் குணம் அடைந்து உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment