கனமழையால் பாதிப்பு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

கனமழையால் பாதிப்பு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை, நவ.30  கனமழையால் பாதிக் கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார். 

தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்பு பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (29.11.2021) காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.சி. குடி யிருப்பு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வை யிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

மேலும், அப்பகுதி மக்களிடம் பாதிப்புகளின் விவரங்களை கேட்ட றிந்து அவற்றை சரிசெய்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். 

பின்னர், கனமழையால் பாதிக் கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவ தற்காக வரதராஜபுரம் ஊராட்சி, வேல்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் நேரில் சென்று, அங்கு தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற் போதுள்ள 25 முகாம்களில் சுமார் 930 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம்

பின்னர் செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட அமு தம் நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வை யிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

பின்னர், தாம்பரம் மாநகராட்சி, வானியன்குளம், இரும்புலியூர் பகுதி யில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள் ளத்தடுப்பு பணிகள் குறித்த விவரங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட் டறிந்தார். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் பார்வையிட வருவதை அறிந்த முடிச்சூர், ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியையும் பார்வையிட வேண்டும் என்று வைத்த கோரிக்கையின் அடிப் படையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் பாதிக்கப்பட்ட ஜோதி நகரையும் பார்வையிட்டு, அங்கு தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தர விட்டு, பொதுமக்களிடம் தேவைப்படும் நிவாரண உதவிகள் குறித்து கேட்டறிந்தார். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை யொட்டி மிகவும் அதிகம் பாதிப் புக்குள்ளாகும் பகுதிகளை கண்ட றிந்து 11 துறைகளைச் சார்ந்த அலுவலர்களை உள்ளடக்கிய 33 குழுக்களும், துணை ஆட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் நிலையில் 8 வட்டங்களுக்கும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழுவும் அமைக்கப் பட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் போர்க்கால அடிப் படையில் நடைபெற்று வருகிறது.

மேலும், கனமழையால் அதிக மாக பாதிக்கக்கூடிய பகுதிகளான முடிச்சூர், தாம்பரம், இரும்புலியூர், கூடுவாஞ்சேரி, தாழம்பூர், பெரும்பாக்கம், ஊரப்பாக்கம் ஆகிய பகுதி களை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 7 சிறப்பு அலுவலர்கள் நிய மனம் செய்யப்பட்டு நிவாரண பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 44 முகாம்களில் சுமார் 2,313 நபர்கள் பாதுகாப்புடன் தங்கவைக்கப் பட்டு, அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதி களும் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின்போது, ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, கு.செல்வப்பெருந்தகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரும், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான எல்.சுப்பிரமணியன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment