'நீட்' தேர்விலிருந்து விலக்கு பெற்றே தீருவோம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

'நீட்' தேர்விலிருந்து விலக்கு பெற்றே தீருவோம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை, அக்.10  கண்டிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று   வெற்றி பெற்றே தீருவோம் என்று அமைச்சர் மா.சுப்பிமணியன் கூறினார்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ் வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஜெயித்து காட்டு வோம் வா என்ற தலைப்பில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக் கான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நேற்று (9.10.2021) நடந்தது. இதில் 500க்கும் மேற் பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் பேசியதா வது:  தமிழ்நாட்டில் 1 லட்சத்து 10,971 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு எழுதுவதற்கு முன்பே மாணவர் களுக்கு அரசு மருத்துவமனைகளில் மனநல ஆலோசகர்கள், மனநல மருத்துவர்களால் ஆலோசனை கள் வழங்கப்பட்டது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களிடம் தொலைபேசி மூலம் பேசுகிற வாய்ப்பு அலுவலர்களுக்கு கிடைத்தது. நீட் தேர்வு எழுதிய 15 சதவீத மாணவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றாலும், மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வுகளைக் கண்டு பயப்படாமல் வாழ்க்கை யில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜெயித்து காட்டு வோம் வா என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்நிகழ்ச்சி பள்ளிக்கல்வி தொலைக்காட்சியில் அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு மீண்டும் ஒளி பரப் பப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் தவிர்த்து 7 மாநில மொழிகளில் .கே.ராஜன் அறிக்கையை மொழி பெயர்த்து அந்தந்த மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இப்படி நீட் தேர் வுக்கு எதிராக பல்வேறு முயற்சி களை முதலமைச்சர் மேற் கொண்டு வருகிறார். 

கண்டிப்பாக நீட் தேர்விலி ருந்து விலக்கு பெற்று, வெற்றி பெற்றே தீருவோம். என்று அமைச் சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: 

பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்பது அவர்களுக்கு நன் மைக்காக மட்டும் தான். பெற் றோர்கள் பிள்ளைகள் மீது நம் பிக்கை வைக்க வேண்டும் மட் டுமே தவிர பிறரோடு ஒப்பிட்டு பேச கூடாது. மாணவர்களான நீங்கள் வெற்றி பெற்றால் சிலை ஆகுங்கள், இல்லையெனில் சிற்பி ஆக இருங்கள். இதுவே வாழ்க்கை. மாணவர்கள்தான் வருங்கால தலைவர்கள். எனவே மாணவர் கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment