கரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் தொடர்கிறதா? - நிபுணர்கள் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 24, 2021

கரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் தொடர்கிறதா? - நிபுணர்கள் கருத்து

புதுடில்லி, அக்.24 அச்சுறுத்தல் இல்லாத உள்ளூர் தொற்றாக கரோனா மாறு கிறதா என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

100 கோடி தடுப்பூசி என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது. கரோனா தொற்று பரவலும், இறப்புகளும் கட்டுக் குள் உள்ளன. மருத்துவமனை சேர்க் கையும் குறைந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதெல்லாம் சாதகமான நிலையாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில பண்டிகைக்காலம் தொற்று பரவலுக்கு உகந்த காலம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால், கரோனா மீண்டும் எழுச்சி பெறும் ஆபத்து இருக்கிறது.

கரோனாவின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி மருத் துவ நிபுணர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். அது வருமாறு:-

சாஹித் ஜமீல் (கவுரவ பேராசிரியர்,  அசோகா பல்கலைக்கழகம், அரியானா):-

நாம் கரோனாவை பொறுத்தமட்டில் எண்டெமிக் என்னும் உள்ளூர் நிலையில் இருக்கிறோமா என்பதை உறுதியாக கூற முடியவில்லை. 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை அடைந்ததற்காக கொண்டாடு கிற சூழலில், இன்னும் நாம் கொஞ்ச தூரம் கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. நாம் உள்ளூர் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் அந்த நிலை வரவில்லை.

(கரோனாவில் உள்ளூர் நிலை என்பது கரோனா வைரஸ் தொடர்ந்து நமது சமூகத்தில் இருக்கும். ஆனால், அதன் வீரியமும் பரவும் ஆற்றலும் குறைந்து விடும். சரியான நேரத்தில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக் கைகளை எடுப்பதன் மூலம் உள்ளூர் அளவிலான தொற்று நோய்களால் பெரிய பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம். பல ஆயிரம் ஆண்டுகளாக மலேரியா அப்படித்தான் இருந்து வருகிறது. அது தவிரச் சாதாரண சளி, பெரியம்மை ஆகியவையும் அப்படித்தான் நமது சமூகத்தில் தொடர்ந்து இருக்கின்றன.)

தினமும் 40 ஆயிரம் பாதிப்பு என்ற நிலை, கடந்த 3 மாதங்களில் தற்போது 15 ஆயிரம் என்ற அளவுக்கு மெல்ல மெல்ல குறைந்து வந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.2 சதவீத அளவுக்கு நிலையாக உள்ளது. இது, நமது நாட்டில் இன்னும் தடுப்பூசி போடவேண்டியதிருக் கிறது என்பதை காட்டுகிறது.

முராட் பனாஜி (பேராசிரியர், மிடில் செக்ஸ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து):-

கொஞ்ச காலமாக கரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது என்பதால் கரோனா உள்ளூர் நோயாகி விட்டது என்று எடுத்துக்கொண்டு விட முடியாது. நாட்டின் சில இடங்களில் அந்த நிலையை நெருங்கி உள்ளது. அதற்கு இன்னும் அதிகமான தரவுகள் வேண்டும். அது எளிதில்லை.

உதாரணத்துக்கு, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில், ஏற்கெனவே தொற்று பாதித்தவர்களில் மீண்டும் எத்தனை பேருக்கு தொற்று தற்போது ஏற்பட்டிருக்கிறது என்று நமக்கு தெரியாது. உள்ளூர் நோயாக மாறும் எதிர்காலம் பற்றி யாருக்கும் தெரியாது. இனி வரும் காலங்களிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக் கைள் தொடர வேண்டும்.

ரமணன் லட்சுமி நாராயணன் (பொருளா தார வல்லுநர், தொற்றுநோயியல் நிபுணர், அமெரிக்கா):- கரோனா வைரஸ் தொற்று குறிப் பிடத்தக்க எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பதை பார்க்க இன்னும் 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆக, கரோனா வைரஸ் தொற்றின் அச்சு றுத்தல் தொடர்கிறது. மக்கள் கையில் தான் அதன் எழுச்சியும், வீழ்ச்சியும் இருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன், கரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றி வருகிறபோது, கரோனா தொற்றும் உள்ளூர் நோயாகும்.  அப்படி மாறுகிற போது, அதன் வீரியமும், பரவும் ஆற்றலும் குறையும். அது சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும். ஆனால் அதற்காக பொறுமை யுடன் காத்திருக்க வேண்டும் என்பது தான் மருத்துவ நிபுணர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment