பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை, தைரியம் உள்ளவர்களாக வளர்க்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை, தைரியம் உள்ளவர்களாக வளர்க்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

சென்னை, அக்.27 பெண் குழந்தைகளை தன்னம் பிக்கை, தைரியம் உள்ள வர்களாக வளர்க்க வேண் டும் என்று பெற் றோருக்கு நாடாளுமன்ற உறுப் பினர் கனிமொழி எம்.பி. அறிவு றுத்தினார்.

தூத்துக்குடி மாவட் டத்தில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் சமூகநலத்துறை சார்பில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பா ளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசினார். தூத் துக்குடி நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குழந்தைகளை பாராட்டுவதும், போற் றுவதும் நாம்தான். அதே நேரத்தில் குழந்தைகளை பாதுகாப்பு இல்லாத சூழலில் வளர்ப்பதும் நாம்தான்.

நாம் குழந்தை களின் உரிமை பற்றி சிந்திப்பதே கிடையாது. அவர்களுக்கு என்று ஒரு உணர்வு உள்ளது, வாழ்க்கை உள்ளது. அடி க்காமல் வளர்த்த பிள்ளை உருப்படாது என்ற நிலையிலேயே வளர்ந்து உள் ளோம். குழந்தைகளை அடித்து துன் புறுத்த யாருக்கும் உரிமை கிடை யாது. குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்று எடுத்துக் கூற வேண்டும். பெண் குழந்தைகளை பெற்றால், திருமணம் செய்து கொடுத்து விட் டால் கடமை முடிந்து விட்டதாக பெற்றோர் நினைக்கின்றனர். அது உண்மை யல்ல. அந்த பெண் குழந்தை கண்ணீர் விட்டால் காலம் முழு வதும் பெற்றோருக்கு வலிக்கும்.

ஆகையால், பெண் குழந் தைகளை தன்னம் பிக்கை, தைரி யம் உள்ள பெண்ணாக வளர்ப் பது தான் பெற்றோரின் கடமை. ஒன்றிய அரசு பெண் குழந்தைகளின் திருமண வயதை 21 ஆக உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது.

அதனை கொண்டு வர வேண்டும். அப்போது தான் பெண்கள் மேல் படிப்பு படிப்பது தொடர் பாக யோசிப்பதற்கான அவகாசம் கிடைக்கும். குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த அனை வரும் ஒத்துழைக்க வேண் டும். குழந்தை திருமணம் நடக்காமல் இருக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிந்தால், தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று யோசிக்காமல், குழந்தை யின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு, உட னடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து குழந்தை திருமணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறுகளே நடக்காமல் பாதுகாப் பான சூழலை குழந்தை களுக்கு உரு வாக்கி தர வேண்டும்.

தூத்துக்குடி மாவட் டத்தை மற்ற மாவட்டங் களுக்கு முன்னு தாரண மான மாவட்ட மாக மாற்ற வேண்டும். குழந்தை களை சிலர் குற்ற செயல்களில் ஈடுபடுத்து கின்றனர்.

இந்த நிலையை மாற்ற வேண்டும். தமிழ் நாடு, குழந் தைகளுக்கு பாதுகாப்பு உள்ள மாநில மாக, உல குக்கே முன் மாதிரியாக திகழ வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சமூகநலத் துறை திட்டங் கள்,  ஊட் டச்சத்து உணவு குறித்த கண் காட்சியை கனி மொழி எம்.பி. திறந்து வைத்து பார்வையிட்டார்.


No comments:

Post a Comment