ஆப்கானிஸ்தானில் பசி, பட்டினியால் 8 சிறுவர்கள் சாவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

ஆப்கானிஸ்தானில் பசி, பட்டினியால் 8 சிறுவர்கள் சாவு

காபூல், அக். 26- ஆப்கானிஸ் தானில் சிறுபான்மை சமூ கத்தினராக ஹசாராக்கள் என்று அழைக்கப்படும் ஹசாரா இன மக்கள் உள்ளனர். கடந்த கால தலிபான் ஆட்சியின் போது (1996- -2001) இந்த ஹசாரா இன மக்கள் கடும் சித்ரவதைக்கு உள் ளாக்கப்பட்டனர்.

தற்போது ஆப்கானிஸ் தானை மீண்டும் தங்கள் வசமாக்கியுள்ள தலிபான் கள் கடந்த முறையை போல அல்லாமல் ஹசாரா இன மக்களை தங்களது அரசு பாதுகாக்கும் என உறுதியளித்துள்ளனர்.

ஆனால் அதற்கு நேர் மாறாக ஹசாரா இனமக் கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த மாத தொடக்கத்தில் ஹசாரா இனத்தை சேர்ந்த 12 வயது சிறுமி உள்பட 13 பேரை தலிபான்கள் சுட் டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் ஹசாரா இன மக்கள் அதிகம் வாழும் மேற்கு காபூலில் சிறுவர்கள் 8 பேர் பசி, பட்டினியால் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள் ளது. முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரான ஹாஜி முகமது மொஹ கேக் என்பவர் முகநூலில் இந்த தகவலை தெரிவித் துள்ளார்.

அவர் தனது பதிவில்மேற்கு காபூலில் வசித்து வரும் ஹசாரா இன மக் கள் பல்வேறு இன்னல் களை எதிர் கொண்டு வருகின்றனர். அவர்க ளுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முறையாக கிடைக்க வில்லை. இதனால் பசி, பட்டினியால் சிறுவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர்என குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment