‘நீட்’ தேர்வால் எனது மகன் இறப்புதான் கடைசியாக இருக்க வேண்டும் தனுஷின் தந்தை வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 13, 2021

‘நீட்’ தேர்வால் எனது மகன் இறப்புதான் கடைசியாக இருக்க வேண்டும் தனுஷின் தந்தை வேண்டுகோள்

சேலம், செப். 13-  என்னுடைய மகன் இறப்பே கடைசியாக இருக்க வேண்டும் என்று தனுஷின் தந்தை கூறியுள்ளார்.  ‘நீட்தேர்வுக்கு பயந்து தற் கொலை செய்த மாணவர் தனுஷ் உடல் நேற்று (12.9.2021) மாலை எரியூட்டல் செய்யப்பட்டது. அதன்பிறகு அவருடைய தந்தை சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு..ஸ்டாலின் தேர்தலின் போது கூறிய அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். ‘நீட்தேர்வை ரத்து செய்வதற்கு தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘நீட்தேர்வுக்கு எதி ராக என்னுடைய மகனின் சாவு தான் கடைசி சாவாக இருக்க வேண்டும்.

நீட்தேர்வை ரத்து செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவப் படிப்பில் தோல்வி அடைந்தால் வேறு ஒரு துறையை தேர்வு செய்து வாழ வேண்டும்.

அதை விட்டு விட்டு மாண வர்கள் என்னுடைய மகனை போன்று ஒரு துயர முடிவை எடுக்கக்கூடாது. ஏழ்மை நிலை யில் உள்ள எங்களது குடும்ப நலன் கருதி குடும்பத்தில் யாருக் காவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment