மக்கள் விரும்பாத பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க கட்டாயப்படுத்த மாட்டோம் : அமைச்சர் கே.என்.நேரு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 13, 2021

மக்கள் விரும்பாத பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க கட்டாயப்படுத்த மாட்டோம் : அமைச்சர் கே.என்.நேரு

சென்னை, செப்.13 திருச்சியில் 11.9.2021 அன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி அதற்கான தேதியை  13.9.2021 அன்று  அறிவிப்பார். தமிழ்நாட்டில் 30 நகராட் சியும், 6 மாநகராட்சியும் அதிகரித் துள்ளன. வார்டு மறுவரையறை செய்யப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சி களை, மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டம் உள்ளது. அதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப் பட்டு ஒத்துக் கொள்ளப்பட்டு கையெழுத்திட்டு கொடுத்திருக் கிறார்கள். ஊராட்சி தலைவர்கள், பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க விருப்பம் இல்லை என்றால், கட்டாயப்படுத்த மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment