ஊடகங்களில் வெளியான பிறகு குப்பை மூட்டைகளை அகற்றிய பா.ஜ.க.வினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 25, 2021

ஊடகங்களில் வெளியான பிறகு குப்பை மூட்டைகளை அகற்றிய பா.ஜ.க.வினர்

 நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்.17 அன்று  தமிழ்நாடு பாஜகத் தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் இணைந்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

 எப்போதும் போல் குப்பைகளை கூடையில் அள்ளிக்கொண்டு வந்து முதல் நாள் இரவே கொட்டிவைத்து அடுத்த நாள் அதை அள்ளும் நாடகம் நடைபெற்றது,

 இந்த நிலையில் குப்பை மூட்டைகளை வரிசையாக கடற்கரையில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்நீண்ட நேரமாக அங்கேயே கிடந்த குப்பை மூட்டைகளை படம் பிடித்து சில ஊடகங்கள் வெளியிட்டன.

 இது உடனடியாக சமூகவலைதளங்களில் வெளியானது, எச்சரிக்கையடைந்த பாஜக பிரமுகர்கள் மாநகராட்சியிடம் பேசி குப்பைவண்டியை வரவழைத்து குப்பைகளை அகற்றி உள்ளனர்.   காலை 8 மணி முதல் 11 மணிவரை அங்கேயே குவிந்து கிடந்த குப்பைகளை ஊடகத்தில் செய்தியாக வந்த பிறகு தூக்கிக் கொண்டு ஓடிய பாஜகவினரின் நாடகம் இங்குமட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒரே மாதிரித்தான் உள்ளது 

No comments:

Post a Comment