முதியோர் பயன்படுத்தும் வகையில் சோலார் சைக்கிளை வடிவமைத்த சிவகங்கை மாணவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

முதியோர் பயன்படுத்தும் வகையில் சோலார் சைக்கிளை வடிவமைத்த சிவகங்கை மாணவர்

சென்னை, ஆக.2  சிவகங்கை கல்லூரிச் சாலையைச் சேர்ந்த வீரபத்திரன். இவரது மகன் வீரகுரு அரிகிருஷ்ணன் (12). திருப்புவனம் வேலம்மாள் பள் ளியில் 8ஆம் வகுப்புப் படித்து வருகிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கு மேலாகப் பள்ளிகள் திறக்காத நிலையில் வீட் டிலேயே இணையத்தில் படித்து வந்தார்.

இந்நிலையில் சைக்கிள் ஓட் டச் சிரமப்படும் முதியோர் களுக்காக சோலார் மூலம் இயங் கும் சைக்கிளை வடிவமைத்தார். மேலும் அந்த சைக்கிளை சூரிய ஒளி இல்லாத சமயத்தில் மின்சாரத்திலும் இயக்கலாம். சூரிய ஒளி இருக்கும்போது முழுமையாகவும், மின்சாரத்தைரீசார்ஜ்செய்தால் 5 மணி நேரமும் ஓட்ட முடியும். இந்த சைக்கிளை 25 முதல் 35 கி.மீ. வேகத்தில் ஓட்டலாம். இந்த சைக்கிளை வடிவமைக்க வீரகுரு அரிகிருஷ் ணன் ரூ.10 ஆயிரம் செலவழித் துள்ளார்.

அவருக்கு உதவியாக சிவ கங்கை சாம்பவிகா பள்ளியில் 7ஆம் வகுப்புப் படிக்கும் அவரது சகோதரர் சம்பத் கிருஷ்ணன் இருந்துள்ளார்.

இதையடுத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் பி.மது சூதன்ரெட்டி பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்.

No comments:

Post a Comment