புதுடில்லி, ஆக.6- இந்திய இளைஞர்களின் குரலை ஒடுக்கும் ஆயுதமே பெகாசஸ் உளவு மென்பொருள் என்று காங்கிரஸ் மேனாள் தலைவரும், மக்களவை உறுப் பினருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டி யுள்ளார்.
டில்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று (5.8.2021) நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது:
‘‘சகோதர, சகோதரிகளே! ஒன்றை நினை வில் கொள்ளுங்கள். உங்கள் அலை பேசியில்தான் உங்கள் குரல். நீங்கள் விரும்பிய கருத்தை உங்கள் அலைபேசிகள் மூலம் நீங்கள் வெளிப்படுத்தலாம். பெகாசஸ் உளவு மென்பொருளை உங்கள் அலை பேசிகளில் பிரதமர் நரேந்திர மோடி புகுத்தியுள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனது அலைபேசி மட்டுமல்ல, நாட்டின் அனைத்து இளைஞர்களின் அலைபேசி களிலும் பெகாசஸ் உளவு மென்பொருள் வைக்கப்பட்டுள்ளது. இந்திய இளைஞர் களின் குரலை ஒடுக்கும் ஒரு கருவியே பெகாசஸ் உளவு மென்பொருள்.
நாட்டின் இளைஞர்கள் உண்மையைப் பேசினால் அவர்களின் அலைபேசிகள் மூலம் அவர்களை பிரதமர் மோடி கண் காணிக்கிறார். பிரதமராக நரேந்திர மோடி இருக்கும்வரை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை” என்றார்.
No comments:
Post a Comment