நியூயார்க், ஆக. 23- உலக நாடுகளில் கரோனா பாதிப்பு மொத்தம் 21,21,03,181 ஆக உள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44,35,512 ஆக உள்ளது. உலக நாடுகளில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 18,97,33,602 ஆக உள்ளது.
இந்த நிலையில், உலக அளவில் கரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா வில் 21.8.2021 அன்று ஒரே நாளில் 90,735 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. கரோனாவுக்கு 515 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,44,838 ஆக உயர்வடைந்து உள்ளது.
மெக்சிகோ: சூறாவளியில் சிக்கி 8 பேர் பலி
மெக்சிகோ சிட்டி, ஆக. 23- மெக்சிகோ நாட்டை 21.8.2021 அன்று ‘கிரேஸ்’ சூறாவளி புயல் தாக்கியது. புயலால் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் பெய்ததால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.
குறிப்பாக, அந்நாட்டின் வெராகூரூஸ் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டது. சூறாவளியால் வீடுகளின் மேற் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
இந்நிலையில், மெக்சிகோவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந் தனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment