பெரியார் பெருந்தொண்டர் செயங்கொண்டம் மானமிகு கே.பி. கலியமூர்த்திக்கு வீர வணக்கம் ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 23, 2021

பெரியார் பெருந்தொண்டர் செயங்கொண்டம் மானமிகு கே.பி. கலியமூர்த்திக்கு வீர வணக்கம் !

செயங்கொண்டம் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கே.பி. கலியமூர்த்தி மறைவுற்றார் (22.7.2021). என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

அணைக்கரை 'டேப்' தங்கராசு அவர்களுடன் இணைந்து அந்த வட்டாரத்தில் இறுதி மூச்சு அடங்கும் வரை கழகத் தொண்டாற்றிய கருஞ்சட்டை வீரர். ஜாதி ஒழிப்புப் போராட்டமான இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று ஓராண்டு சிறை ஏகியவர்.

 மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களில் எல்லாம் தவறாமல் அலகுக் குத்தி காவடி எடுப்பார். இயக்கமே உயிர் மூச்சாகக் கொண்டவரின் உயிர் பிரிந்தது. அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், இயக்கத் தோழர் களுக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங் கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியார் பெருந்தொண்டருக்கு வீர வணக்கம்!


 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

23-7-2021

No comments:

Post a Comment